வீட்டை உடைத்து கொள்ளை

திருமங்கலம், பிப்.26: திருமங்கலம் அருகே பூட்டியவீட்டின் கதவை உடைத்து பணம், நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபுதுப்பட்டியை சேர்ந்தவர் ராமர் மனைவி சுமதி. நேற்று முன்தினம் இவர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக கள்ளிக்குடிக்கு வீட்டை பூட்டி சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவில் வீடு புகுந்து கதவை உடைத்து வீட்டிலிருந்த 5 பவுன் நகை வெள்ளிபொருள்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்றுவிட்டனர். நேற்று காலை வீட்டின் கதவு திறந்துகிடப்பது குறித்து அக்கம்பக்கத்தினர் சுமதிக்கு தகவல் தந்தனர். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: