பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி இந்துநாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கொரோனா காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய தேர்தல் 1 வருடம் கடந்து தற்போது நடத்தப்பட்டது. தேர்தலில் முரளி தலைமையில் போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றனர். இந்துநாடார் உறவின்முறை சங்க தலைவராக முரளி, துணைத்தலைவராக பிரசன்னா, செயலாளராக மோகன்குமார் ஆகியோர் பொறுப்பேற்றனர். மேலும் நாடார் சுந்தரவிசாலாட்சி வித்யசாலா மெட்ரிக்பள்ளி தலைவராக பிரசன்னா, செயலாளராக கோபிநாத், ஆண்கள் பள்ளி செயலாளராக நிர்மல், தொடக்கப்பள்ளி தலைவராக செந்தில்குமார், செயலாளராக சங்கரபாண்டியன், பெண்கள் பள்ளி தலைவர் ஞானசேகரன், செயலாளராக விஜயவேல், மாணவர் விடுதி தலைவராக தீனதயாளமூர்த்தி, செயலாளர் அன்புச்செழியன் ஆகியோர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் நிர்வாகிகள் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.