ஆத்தூரில் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறும் அரசு அலுவலகங்கள்

சின்னாளபட்டி, பிப். 26: ஆத்தூர் தாலுகா அலுவலகம் போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிவருகிறது. இது தவிர அலுவலகம் உள்ளே செயல்படும் தீயணைப்பு நிலைய சுவற்றிலும், அரசு விளம்பரங்களை மறைத்தவாறு வால்போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.ஆத்தூர் தாலுகா அலுவலகம் ஆத்தூரில் உள்ளது. அலுவலக காம்பவுண்ட் சுவர் மற்றும் உள்புறங்களில் பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அரசு அலுவலகங்களில் வால்போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என அரசு விதி இருந்தும் அரசு விளம்பரங்களையும், அரசு விழிப்புணர்வு விளம்பரங்களையும் மறைத்தவாறு வால்போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து ஆத்தூர் தாசில்தார் பவித்ராவிடம் கேட்ட போது, `பொதுப்பணித்துறை அதிகாரிகள் தாலுகா அலுவலகத்தை புதுப்பித்து வருகின்றனர். விரைவில் காம்பவுண்ட் சுவர் மற்றும் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்ட வால்போஸ்டர்கள் அகற்றப்படும்’ என்றார்.

Related Stories: