அரியலூர், பிப்.25: அரியலூர் நகரில் மாலை 5 மணியளவில் அண்ணா சிலையில் ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போறாரு என்ற தேர்தல் பிரசாரப் பாடலை பொது மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் சைக்கிள் பேரணி தொடங்கி கடைவீதி, தேரடி, சத்திரம், மாதா கோயில் தெரு, சின்னக்கடை வீதி, மார்க்கெட் தெரு, ராஜாஜி நகர், காலேஜ் ரோடு, மாங்காய் பிள்ளையார் கோயில் தெருவழியாக வந்து தொடங்கிய இடத்தில் நிறைவு பெற்றது. இதில் நகர செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, துணை அமைப்பாளர் லூயிகதிரவன், நகர நிர்வாகிகள், வக்கீல்கள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.