ஊட்டி, பிப்.25: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 331 பேரை போலீசார் கைது செய்தனர். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரங்கராஜன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். இதில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களாக்கி கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வுடன் கூடிய முறையான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.