கோவை, பிப். 25: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அக்ரிகல்ச்சர், ஹார்டி கல்ச்சுரல் சர்வீசஸ் பணிகாலியிடத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அக்ரிகல்ச்சர், ஹார்டி கல்ச்சுரல் சர்வீசஸ் பணிகாலியிடத் தேர்வுகள் வருகிற ஏப்ரல் 17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் மார்ச் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும், தேர்வு எழுதுபவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் இம்மாத இறுதி வாரத்தில் கோவை தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.