கோவை,பிப்.25: கோவை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை 5 ஆயிரம் சரக்கு லாரிகள், எல்.சி.வி வேன்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டங்களை கண்டித்து நாளை (26-ம் தேதி) ஒரு நாள் வேைலநிறுத்ததை தென்மாநில லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்தது. இதற்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் பொதுநல டிரஸ்ட், மாவட்ட பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் சங்கம் உள்பட 9 சங்கங்கள் நாளை நடக்கும் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறது. இதையடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.