ஆரல்வாய்மொழி, பிப்.25: செண்பகராமன்புதூரில் கயிறு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் சரணவன். இவர் செண்பகராமன்புதூர் கம்பி பாலம் அருகில் கயிறு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலை சுற்று சுவர் அருகில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான சாமுவேல் (70) குடிசை அமைத்து குடியிருந்து வருகிறார். அவர் ஆடுகளை மேய்த்து ஆங்கேங்கே பட்டி அமைத்து தங்குவார். அவ்வப்போது இந்த குடிசைக்கு வந்து செல்வார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அவரது குடிசை மற்றும் கயிறு ஆலையில் தீப்பிடித்துள்ளது. இதில் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதுபோல் ஆலையில் கயிறு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த தும்பு மற்றும் உற்பத்தி செய்து வைத்திருந்த கயிறுகள், இயந்திரங்கள் என அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது.