செங்கம், பிப்.25: செங்கம் அருகே குப்பநத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.குப்பநத்தம் அணையில் முழு நீர் மட்டம் 59.04 கன அடியாகும். அதில் தற்போது 52.15 கன அடி தண்ணீர் கொள்ளவு உள்ளது. எனவே குப்பநத்தம் அணையிலிருந்து பாசன வசதிக்காக 20 நாட்கள் தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதன்படி நேற்று குப்பநத்தம் அணையிலிருந்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மகேந்திரன் தண்ணீரை திறந்து வைத்தார். இதையறிந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.மேலும், வரும் மார்ச் 5ம் தேதி வரை வினாடிக்கு 265.00 கன அடி வீதமும், அதன்பிறகு 16ம் தேதி வரை வினாடிக்கு 230.00 கன அடி வீதம் 20 நாட்களுக்கு 424.98 மில்லியன் கன அடி தண்ணீர் செங்கம், கரியமங்கலம், காயம்பட்டு, தோக்கவாடி, செ.நாச்சிபட்டு, முன்னூர், மங்கலம், கொட்டகுளம், முத்தனூர், தொரபாடி, நரசிங்கநல்லூர், படி அக்ரகாரம், பனைஒலைபாடி, ஒரவந்தவாடி, சி.சொர்பனந்தல்,