மானாமதுரை,பிப்.25: மானாமதுரையில் சர்வதேச உரிமைகள் கழகம் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நிர்வாகி சாமிவேல் தலைமையில் நடந்தது. நிர்வாகி சேசுராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை செயல்பாடுகள் குறித்தும் பேசபட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மாநில பொருளாளர் ஜெயராஜ், தலைமை கழக செயலாளர் செல்வம், பாரதி, மாரியப்பன், பிரான்சிஸ், ஜெயக்குமார், கடற்கரை தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிர்வாகி பிரபாகரன் நன்றி கூறினார்.