விபத்து சாலைக்கு விடிவு வருமா?

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.25:  பணிதிவயலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளதால், வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை சரி செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலத்தில் பரமக்குடி நெடுஞ்சாலையில் பணிதிவயல் விலக்கு ரோட்டில் இருந்து நயினார்கோவில் செல்லும் சாலையில் அரை கி.மீ தூரத்திற்கு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை மிகவும் முக்கியமான சாலையாகும். இந்த சாலை வழியாகதான் நயினார்கோவில் வழியாக பரமக்குடி செல்லும் பேருந்து வழித்தடம், இதுபோக தினசரி ஏராளமான டூவீலர்களும், பஸ் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.

பணிதிவயல் நகரம், கீரம்பாண்டி, மூவலூர் உள்ளிட்ட கிராம மக்கள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட போத, தற்பொழுது பழுதாகி உள்ள அரை கி.மீ தூரத்தை மட்டும் அப்படியே விட்டுள்ளனர். இதனால் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடன் பழுதான சாலையை சரி செய்து தர வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: