ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.25:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் உள்ள ராதானூர்,ஆனந்தூர், ஆய்ங்குடி,கூடலூர்,ஆப்பிராய்,சனவேளி, இந்திரா நகர், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளர் நந்திவர்மன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். அத்துடன் அந்த பகுதிகளில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து,பொதுமக்க

ளுக்கு இனிப்புகள் வழங்கினார். அத்துடன் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் நாகராஜன், ஆர்.எஸ்.மங்கலம் பேரூர் அவைத்தலைவர் கோட்டைச்சாமி, பேரூர் செயலாளர் குட்லக் ரகுமத்துல்லா, இளைஞர் அணி செயலாளர் ராஜா, மாணவரணி செயலாளர் அன்பழகன், ஊராட்சி தலைவர் கண்ணன், கவிதா அசோகன், முன்னாள் கவுன்சிலர் ராஜபாண்டி, மகளீர் அணி செயலாளர் ரஞ்சிதம் ஆப்பிராய், கூட்டுறவு சங்கத்தலைவர் லெட்சுமணன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் துரை.மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிருஷ்ணன் மற்றும் கலர் கலந்து கொண்டனர்.

Related Stories: