கள் விற்ற 2 வாலிபர்கள் கைது

பரமக்குடி, பிப்.25:  பரமக்குடி தாலுகா சத்திரக்குடி பகுதிகளில், சிக்கல் தேரிருவேலி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பனை மரத்தில் இறக்கப்படும் கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதனால் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று, சத்திரக்குடி அருகேயுள்ள பி.கொடிக்குளம் கிராமத்தில் கள் விற்பனை செய்வதாக சத்திரக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் சோதனை செய்ததில், சிக்கல் கிராமத்தைசேர்ந்த  சக்தி(35), சண்முகநாதன்(35) ஆகியோர் கள்ளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இருவரையும் கைது செய்த போலீசார், 36 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: