நீட் முதுநிலை பட்ட தேர்விற்கு தமிழகம், புதுச்சேரி மையங்கள் 4 மணிநேரத்தில் காலியானது திணறும் தமிழ் தேர்வர்கள்

மதுரை, பிப். 25: மதுரை எம்பி சு. வெங்கடேசன் மத்திய சுகாதார அமைச்சருக்கும், தேசிய தேர்வு கழகத்திற்கும் அனுப்பியுள்ள கடிதங்களில் கூறியிருப்பதாவது: இரு நாட்களாக தமிழகத்தை சேர்ந்த நிறைய நீட் முதுநிலை பட்ட தேர்வர்கள் என்னை தொடர்பு கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்து வருகிறார்கள். ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான நேரம் துவங்கி 4 மணிநேரத்திற்குள் தமிழ்நாட்டு மையங்கள் நிரம்பி விட்டதாக தெரிகிறது. ஆகவே தேர்வர்கள் தமிழ்நாட்டு மையத்தை தேர்வு செய்ய முடியவில்லை. அதற்கு பிறகு புதுச்சேரி, கேரளா மையங்களும் நிரம்பி விட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.  இது தேர்வர்கள் மனதில் பதட்டத்தையும், பாதிப்பையும் உருவாக்கியுள்ளது. கோவிட் காலம் என்பதால், வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்வதும், அங்கு போய் தங்குவதும் மிகக்கடினமாக இருக்கும். குறிப்பாக பெண் தேர்வர்கள், அவர்களோடு துணையாக செல்லும் மூத்தவர்கள் கூடுதல் சிரமங்களை எதிர் கொள்வர். ஆகவே தேர்வர்களின்  நியாயமான உணர்வுகளை கணக்கில் கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் மையங்களை உடனடியாக ஏற்பாடு செய்ய நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: