வங்கி முன்பு நிற்கும் டூவீலர்களில் பணம் திருடும் ‘பிரதர்ஸ்’ கைது

அலங்காநல்லூர், பிப். 25: அலங்காநல்லூர் கலைவாணர் நகரை சேர்ந்தவர் கருப்பணன் (65). விவசாயி. இவர் கடந்த 4ம் தேதி அலங்காநல்லூர் பஸ்ஸ்டாண்ட் அருகே தனியார் வங்கி முன்பு தனது டூவீலரில் ரூ.3 லட்சம் பணத்தை வைத்து விட்டு சென்று திரும்பிய போது பணத்துடன் டூவீலர் மாயமானது. இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் குமாரம் பகுதி வங்கி முன்பாக சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர்கள் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சகோதரர்கள் செந்தில்நாதன் (40), வெங்கடேஷ் (37) என்பதும்,  இவர்கள் அலங்காநல்லூர் கருப்பணனின் ரூ.3 லட்சம் பணம், டூவீலரை திருடியதும் தெரிந்தது. மேலும் இவர்கள் மீது தர்மபுரி, திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுபோல் தொடர் திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, ரூ.1 லட்சம் பணம், ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: