செய்யூர்: செய்யூர் தாலுகா சூனாம்பேடு ஊராட்சி இல்லீடு கிராமம் காலனி பகுதியில் சுமார் 700 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு நேற்று அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டன. ஒரு பொருளை கொடுத்து விட்டு, மற்றொரு பொருள் இல்லை என கடை ஊழியர் கூறினார். இதனால், ஆத்திரமடைந்த மக்கள், ஏன் எப்போதும் பொருட்கள் இல்லை என கூறுகிறீர்கள் என கேட்டனர். குறிப்பாக மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ஒவ்வொரு மாதமும் முறையாக வழங்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், கடை ஊழியர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.