அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் 9க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அரசு ஊழியர்களை தாக்கிய போலீசாரை கண்டித்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டங்களை அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Related Stories: