நாளை நடைபெறுகிறது பொன்னமராவதியில் நேருயுவகேந்திரா சார்பில் மழைநீர் சேகரிப்பு உறுதி மொழி ஏற்பு

பொன்னமராவதி, பிப்.24: பொன்னமராவதியில் நேரு யுவகேந்திரா சார்பில் மழைநீர் சேகரிப்பு பற்றிய கருத்தரங்கம் நடந்தது. பொன்னமராவதி வயலக அலுவலகத்தில், இந்திய அரசு இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா சார்பில் மழைநீர் சேகரிப்பு பற்றிய, இணையவழி காணொளி கருத்தரங்கம் மற்றும் பொன்னமராவதி ஒன்றிய இளைஞர் வளர்ச்சி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் தலைமை வகித்தார்.மழைநீர் சேகரிப்பு பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

Related Stories: