அரியலூர், பிப்.24: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 122 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆண்டிமடம் மாலா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சங்கீதா, மாநில செயலாளர் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் சுமதி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன், செயலாளர் முத்து உள்ளிட்டோர் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் பங்கேற்று பேசினார்.