×

வேடசந்தூர் அருகே மளிகை கடையில் பணம் திருட்டு

வேடசந்தூர், ஏப். 23: வேடசந்தூர் அருகேயுள்ள குட்டம் ஊராட்சி சுக்காம்பட்டியில் மளிகை கடை வைத்திருப்பவர் குமரவேல் (50). இவர் தனது கடையில் அரிசி வாங்குவதற்காக ரூ.1 லட்சம் பணத்தை கட்டி டப்பாவில் வைத்திருந்தார். மேலும் கல்லா பெட்டியில் ரூ.15 ஆயிரம் பணம் இருந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் நேற்று காலையில் வந்து பார்த்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் காணாமல் போய் இருப்பதும், கடையை தீவைத்து எரிக்க முற்பட்டதும் தெரியவந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து குமரவேல் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Vedasanthur ,Kumaravel ,Sukambatti, Kuttam panchayat ,
× RELATED குலசை கோயில் வருஷாபிஷேக விழா