கீழக்கரை, பிப்.24: கீழக்கரையில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அலுவலகம் திறப்பு விழாவை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் கீழக்கரையை சேர்ந்த எம்.எம்.ஜே.உம்முல் பரிதா,என்.சிவபழனி ஆகிய நீதிபதிகளை கௌரவிக்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி, கோவில், தேவாலயங்களுக்கு சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டன. எம்பி நவாஸ்கனி ஜமாஅத் கூட்டமைப்பு அலுவலகத்தை திறந்து வைத்தார். அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் ஹாமீது இப்ராஹிம், கீழக்கரை காவல் நிலையத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசனிடம் கணினி மற்றும் பிரிண்டர் வழங்கினார். துணை தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம் நீதிபதிகளை கௌரவித்தார். மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷாஜஹான் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் ஷேக் ஹுசைன் வரவேற்றார்.