மனைவிக்கு மிரட்டல்: கணவர் மீது வழக்கு

பரமக்குடி, பிப்.24:  பரமக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்திரா பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், போதுமான வரதட்சணை கொடுக்கவில்லை என கோரி கணவர் தொடர்ந்து தொந்தரவு செய்கிறார். மேலும், வரதட்சணை கொடுக்கவில்லை என்றால், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்று மிரட்டினார். எதிர்ப்பு தெரிவித்தால், அடித்து கொலை செய்வதாக மிரட்டுகிறார் என கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில், சுப்பிரமணியன் மீது வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: