காரில் வெள்ளாடு திருட்டு

தொண்டி, பிப்.24:  எஸ்.பி.பட்டினம் பகுதியில் வெள்ளாடுகளை காரில் கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் அருகே கட்டிவயலை சேர்ந்தவர் ராஜகோபாலன். இவர் நேற்று முள்தினம் இரவு ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டில் கட்டியுள்ளார். நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு பார்த்த போது, அடையாளம் தெரியாத இருவர் ஆடுகளை காரில் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை விரட்டியபோது தப்பி ஓடிவிட்டனர். திரும்பி வந்து பார்த்த போது 7 ஆடுகள் திருடு போயிருந்தது. புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: