ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஊத்துமலையில் பைக் பேரணி

ஆலங்குளம், பிப். 24: ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் ஊத்துமலையில் நடந்த பைக் பேரணியில் திரளானோர் பங்கேற்றனர். ஆலங்குளம் அருகே ஊத்துமலையில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ‘ஸ்டாலின் தான் வாராரு; விடியல் தரப் போறாரு’ என்ற தலைப்பில் பிரசார பைக் பேரணி  நடந்தது.  தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையிலான இப்பேரணி ஊத்துமலை பஸ் நிறுத்தம் அருகே  ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து துவங்கியது. மேலமருதப்பபுரம், அண்ணாமலைப்புதூர், கங்கணாங்கிணறு, பலபத்திரராமபுரம், மருதாத்தாள்புரம், தங்கம்மாள்புரம், மருக்காலங்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், தெற்கு காவலா குறிச்சி, வடக்கு காவலாகுறிச்சி,  ருக்குமணியம்மாள்புரத்தில்  நிறைவுபெற்றது.

.

 30 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்ட இந்த பைக் பேரணியில் வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சூடாமணி, பேரூர் செயலாளர்கள் ஜெயபாலன், ஜெகதீசன், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் சசிகுமார், ஆதிதிராவிடர் நல அணி மாவட்ட அமைப்பாளர் சங்கர நயினார், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் சங்கர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பொன் செல்வன்,  இளைஞரணி ஒன்றியச் செயலாளர் கிருஷ்ண ராஜ், வெள்ள துரைபாண்டியன், கிளைச் செயலாளர்கள் ராமசந்திரன், சூடாமணி, ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: