ஆலங்குளம், பிப். 24: ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் ஊத்துமலையில் நடந்த பைக் பேரணியில் திரளானோர் பங்கேற்றனர். ஆலங்குளம் அருகே ஊத்துமலையில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ‘ஸ்டாலின் தான் வாராரு; விடியல் தரப் போறாரு’ என்ற தலைப்பில் பிரசார பைக் பேரணி நடந்தது. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் தலைமையிலான இப்பேரணி ஊத்துமலை பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து துவங்கியது. மேலமருதப்பபுரம், அண்ணாமலைப்புதூர், கங்கணாங்கிணறு, பலபத்திரராமபுரம், மருதாத்தாள்புரம், தங்கம்மாள்புரம், மருக்காலங்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், தெற்கு காவலா குறிச்சி, வடக்கு காவலாகுறிச்சி, ருக்குமணியம்மாள்புரத்தில் நிறைவுபெற்றது.
.