புளியங்குடி, பிப். 24: புளியங்குடியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி ஆணையாளர் குமார் சிங் தலைமையில் வாசுதேவநல்லூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜ்குமார் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 20ம் தேதி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டநிலையில் 2ம் கட்டமாக நேற்று முன்தினம் (22ம் தேதி) இரண்டாவது நிலையாக நகராட்சி ஆணையாளர், குமார் சிங், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 88 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட்து.