வி.கே.புரத்தில் வெட்டப்பட்ட மரக்கிளைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வி.கே.புரம், பிப்.24: வி.கே.புரம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே மெயின் ரோட்டில் வெட்டப்பட்ட மரக்கிளைகளை அகற்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வி.கே.புரம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே மெயின் ரோட்டில் ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் நின்ற இளவம்பஞ்சு மரம் பல மாதங்களுக்கு முன் வெட்டி அகற்றப்பட்டது.வெட்டப்பட்ட மரம், அதன் கிளைகள் பல மாதங்களாகியும் அங்கிருந்து அகற்றப்படவில்லை. இதனால் சாலை ஓரத்தில் கிடக்கும் மரக்கிளைகளை உடனே சம்பந்தபட்ட துறையினர் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Related Stories: