தாராபுரம்.பிப்.23: தாராபுரம் நேற்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது,தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் ஆரம்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது, சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைப்பதற்கும்அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் கூடுதலாக 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது 5 புதிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக உருவாக்கி அதற்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவிப்பது.