மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சுகாதார வளாகம் திறப்பு

உடுமலை, பிப்.24:சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை, சுகாதார வளாகத்தை ஜெயராமகிருஷ்ணன் எம்எல்ஏதிறந்து வைத்தார்.மடத்துக்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான  தனித்தனி சுகாதார வளாகங்கள், குடிநீர் சுத்திகரிப்பு கருவி மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.மடத்துக்குளம் தொகுதி திமுக., எம்எல்ஏ., ஜெயராமகிருஷ்ணன் இவற்றை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஈஸ்வரசாமி மற்றும் கவுன்சிலர்கள் முரளி, பாபு, பழனிச்சாமி, ஐயப்பன், சாகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: