அந்தியூர், பிப். 24: டி.வி. நடிகையின் பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் செல்போன் எண் உள்ளதால், வாலிபர்கள் போன் செய்து தெந்தரவு செய்வதாக போலீசில் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவை பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். டிவி தொடர் நடிகை நந்தினி மைனா பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி, குருநாதனின் செல்போன் எண்ணை இணைத்துள்ளனர்.