சத்தியமங்கலம், பிப். 24: சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு பண்ணாரிஅம்மன் குழுமங்களின் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். டி.வி.எஸ் குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் 1,721 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘‘அமெரிக்கா உருவாக்கிய கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர், அமேசான் போன்ற தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். மாணவர்கள் இது போன்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். அமெரிக்கா போன்று தொழில்நுட்பத்தில் சீனாவும் முயன்று வருகிறது. தன்னம்பிக்கை இல்லாமல் எதையும் சாதிக்கமுடியாது.