சங்கரன்கோவிலில் பிளஸ் 2 மாணவி மாயம்

சங்கரன்கோவில், பிப். 23: சங்கரன்கோவிலில் பள்ளி சென்றபோது  மாயமான பிளஸ் 2 மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.  சங்கரன்கோவில் தேனப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (57). இவரது மகள்  விஜயலட்சுமி (19) இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்ற விஜயலட்சுமி, வீடு  திரும்பவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில்  தேடிப்பார்த்தும் மாணவியை பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. புகாரின் பேரில் வழக்குப் பதிந்த  சங்கரன்கோவில் நகர போலீசார், மாயமான மாணவியைத் தேடி வருகின்றனர்.

Related Stories: