வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

நாங்குநேரி, பிப். 23: மூன்றடைப்பு அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  மூன்றடைப்பு அடுத்த பாணான்குளம் சூரப்பபுரத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன் மனைவி சரோஜா (69). தம்பதியின் 3 மகன்கள், இரு மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கணவர் மறைவுக்குப் பிறகு வீட்டில் தனியாக வசித்துவந்த சரோஜா சம்பவத்தன்று வழக்கம்போல் சித்தர் கோயிலுக்கு பூஜை செய்ய சென்றார். பின்னர் திரும்பியபோது வீட்டின் கதவு திறந்துகிடந்தது கண்டு பதறினார். உள்ளே சென்றபோது  பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ஒரு குத்துவிளக்கு, ரூ. 5 ஆயிரம் ஆகியன மர்மநபர்களால் திருடுபோனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் மூன்றடைப்பு எஸ்ஐ சண்முகப்பெருமாள் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

Related Stories: