பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதை  கண்டித்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, மத்திய,  மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டை சின்னமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழச்சி தங்கபாண்டியன்  எம்பி, வாகை சந்திரசேகர் எம்எல்ஏ, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், கே.கே.நகர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன  உரையாற்றினார்.

இதில், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், பெருங்குடி ரவிச்சந்திரன், சேகர், மதிவாணன், மாவட்ட அவை தலைவர் குணசேகரன், சைதை சாதிக், பாலவாக்கம்  சோமு, விஸ்வநாதன், மணிமாறன், வேளச்சேரி பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகர் ராஜா, சைதை சம்பத், வழக்கறிஞர்  தர், மேடவாக்கம் ரவி, சைதை அன்பரசன், விநாயகமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

* சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர் பெரியார் நகரில் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் தி.மு.தனியரசு, கே.பி.சங்கர் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். ஆ.ராசா எம்பி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷமிட்டார். இதில், மாநில மீனவர் அணி செயலாளர் பத்மநாபன், நிர்வாகிகள் கண்ணதாசன், ராமநாதன், கவி.கணேசன், குறிஞ்சி கணேசன்,  முருகேசன், ஆதி குருசாமி, திரிசங்கு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தாம்பரம் சண்முகம் சாலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் திமுக பொருளாளரும்,  ஸ்ரீபெரும்புதூர்  நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, எம்எல்ஏக்கள், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, இதயவர்மன், வரலட்சுமி மதுசூதன், கழக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, திமுக பிரமுகர்கள் காமராஜ், ஜோதிகுமார், ரங்கநாதபுரம்  ரவி, பாரதி, வேல்மணி, கருணாகரன், செல்வகுமார், ஹரிஷ் (எ) அன்பு, செம்பாக்கம் சுரேஷ், ஜி.ஹரிஷ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

* சென்னை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா  முன்னிலை வகித்தார். டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி சிறப்புரையாற்றினார். கலாநிதி வீராசாமி எம்பி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் மற்றும் எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ரங்கநாதன், ரவிச்சந்திரன், ஆர்.டி.சேகர், வடசென்னை மாவட்ட  வழக்கறிஞரணி அமைப்பாளர் மருதுகணேஷ், சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் தேவ ஜவகர், இலக்கிய அணி அமைப்பாளர் ரெயின்போ விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக, வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதுகணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாட்டுவண்டியில் பைக்கையும், காஸ் சிலின்டரையும் வைத்து ஊர்வலமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து  கடற்கரை வரை  கொண்டு வந்தனர்.

Related Stories: