மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.23: மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக மின்வாரியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: