மத்திய, மாநில அரசை கண்டித்து மமக தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, பிப்.23: பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், தட்டிகேட்காத மாநில அரசை கண்டித்தும், எரிபொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும் மமக தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று பாலக்கரை ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சபியுல்லா தலைமை வகித்தார். தமுமுக, மமக தெற்கு மாவட்ட தலைவர் உதுமான் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் அசரப் அலி, மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

Related Stories: