×

செங்குந்தபுரம் நவநீதகிருஷ்ணன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம், ஏப். 19: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள செங்குந்தபுரம் நவநீதகிருஷ்ணன் கோயிலில் சிவனடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

நேற்று காலை 8.45 மணி முதல் செங்குந்தபுரம் 5வது தெருவில் உள்ள நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் அகிலமே பழமலை நாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் திருமுதுகுன்றம் விருத்தாசலம் சிவத்திரு அருள்முருகன் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் செங்குந்தபுரம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து சிவனடியார்கள் கலந்து கொண்டனர்

 

Tags : Thiruvasakam Muttothal ,Navaneethakrishnan Temple ,Sengunthapuram ,Jayankondam ,Thiruvasakam Muttothal ceremony ,Shiva ,Ariyalur district ,Abhishekam ,Vinayagar ,Murugan ,Valli ,Deivanai ,
× RELATED ராமேஸ்வரத்தில் பரபரப்பு பற்றி எரிந்தது படகு