பெரம்பலூர்,பிப்.23: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பெரியாண்டவர் தெருவில், காவல்நிலையம் பின்புறம் குடியிருப்பவர் சதீ ஸ்குமார்(40). அரும்பாவூர் பாலக்கரை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 20ம்தேதி தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு சாமிகும்பிட சென்று விட்டார். உள்ளூ ரில் குடியிருக்கும் சதீஸ்குமாரின் மாமியார் தினமும் சதீஸ்குமாரின் வீட்டின் வாசலை பெருக்கி, கோலம் போட்டு வந்தார். நேற்று காலை சதீஸ்குமார் வீட்டு வாசலுக்கு கோலம்போட சென்ற அவரது மாமியார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மருமகன் சதீஸ்குமாருக்கும், காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.