குளித்தலை- மணப்பாறை சாலை ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

குளித்தலை, பிப். 23: கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை சாலையில் உள்ளது ரயில்வே கேட் இவ்வழியாக இதிலிருந்து வரும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் மதுரை திண்டுக்கல் மணப்பாறை பழனி பஞ்சப்பட்டி தரகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்தும் நகர பகுதியில் இருந்தும் வாகனங்கள் செல்கின்றன அதேபோல் கரூர் முசிறி நாமக்கல் சேலம் துறையூர் பெட்டவாய்த்தலை பகுதியிலிருந்து வரும் வாகனங்களும் இவ்வழியாக தான் மணப்பாறை நோக்கி செல்கிறது. மேலும் பள்ளி கல்லூரி வாகனங்கள் விவசாய இடுபொருள்கள் ஏற்றும் வாகனங்கள் அதிக அளவில் தினந்தோறும் செல்வது வழக்கம் .இதனால் காலை முதல் மாலை வரை விரைவு ரயில்கள் பயணிகள் ரயில்கள் சரக்கு ரயில்கள் செல்லும் பொழுது கேட் மூடப்பட்டால் இருபுறமும் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படும் மேலும் குளித்தலை சுற்றுப்புற பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டாலோ உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் கொண்டு வரும்பொழுது திடீரென ரயில்வேகேட் போடப்பட்டால் நோயாளிகள் முதலுதவி சிகிச்சை பெற தாமதம் ஏற்படுகிறது.

இதனால் ஒரு சில நேரங்களில் உயிர் பலியும் நேரும் நிலை ஏற்படுகிறது இந்நிலை குறித்து இப்பகுதி பொதுமக்கள் குளித்தலை மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் .அதன்படி பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ஒவ்வொரு முறையும் வரும் அதிகாரிகள் ஒவ்வொரு காரணங்களை கூறிக்கொண்டு தங்களுக்கு இட்ட பணிகளை செய்து மேலதிகாரிகளுக்கு நாங்கள் அறிக்கை சமர்ப்பிக்கிறோம் என கூறிவிட்டு சென்றுவிடுவார்கள் .

இந்நிலை தொடர்ந்து நீடிக்கிறது ஆனால் குளித்தலை மணப்பாறை சாலையில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். அதிகாரிகள் சினிமா பாணியில் மேம்பாலம் குறித்து கேட்டால் வரும் ஆனால் எப்போது வரும் என்று தெரியாது என பதில் கூறி விட்டு சென்றுவிடுவார்கள். அரசியல்வாதிகளும் தேர்தலின்போது வாக்குறுதிகள் ஒன்றான ரயில்வே மேம்பாலத்தில் கூறிவிட்டு சென்றுவிடுகின்றனர் அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை அதனால் பகுதி பொது மக்களின் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் விரைவில் குளித்தலை மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: