இளம்பிள்ளை, பிப்.23: காடையாம்பட்டி நிறுத்ததில், அரசு பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் மாணவர்கள் மறியலுக்கு முயன்றனர். இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காடையாம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் அரசு பஸ் சென்று வருகிறது. காலை 8.30 மணிக்கு வரும் இந்த பஸ் இளம்பிள்ளை, இடங்கணசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது. காலையில் விவசாயிகள் விளைவித்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகள் சேலத்திற்கு விற்பனைக்கு கொண்டு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் அங்குள்ள அரசு பள்ளிக்கு இப்பஸ்சில் தான் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் வந்த அரசு பஸ் இடங்கணசாலை அருகே காடையாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.