ராசிபுரத்தில் ₹10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரம், பிப்.23: ராசிபுரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், நேற்று விவசாயிகள் கொண்டு 416 மூட்டை பருத்தி, ₹10 லட்சத்துக்கு ஏலம் போனது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில், ஆர்.கவுண்டம்பாளையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஆர்சிஎச் மற்றும் டிசிஎச் ரகம் 416 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹5,970 முதல் ₹7,777 வரையும், டிசிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹8,790 முதல் ₹9,509 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக ₹10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்ததாக  கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: