பச்சுடையாம்பாளையத்தில் பண்ணையப்பள்ளி பயிற்சி

நாமகிரிப்பேட்டை, பிப். 23: நாமகிரிப்பேட்டை வட்டாரம் பச்சுடையாம்பாளையம் கிராமத்தில்,  அட்மா திட்டத்தின் கீழ் மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற துணை வேளாண் அலுவலர் வைத்தியலிங்கம், தனியார் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல், கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி எடுத்துரைத்தனர். பயிற்சியில் பங்கேற்ற 25 விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடு மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டது. இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் மேனகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: