மனை விற்பனைக்கு அனுமதி மறுப்பு பஞ்.அலுவலகத்தில் விவசாயி திடீர் தர்ணா

சேந்தமங்கலம்,  பிப்.23: சேந்தமங்கலம் ஒன்றியம் பெரியகுளம் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி மாதையன்(47). இவர் தனது வீட்டுமனையை விற்பனை செய்ய, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்புதல் கேட்டு மனு கொடுத்தார். ஆனால், அதிகாரிகள் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரில் சென்ற மாதையன், மனு சம்பந்தமாக  கேட்ட போது, அங்கிருந்த அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாதையன்,  திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த சேந்தமங்கலம் பிடிஓ ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன்  ஆகியோர் வந்து, தர்ணாவில் ஈடுபட்ட மாதையனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு நாட்களில் வீட்டு மனைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் சமாதானமடைந்த மாதையன், தர்ணா போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து சென்றார்.

Related Stories: