யோக விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

சேந்தமங்கலம், பிப்.23: எருமப்பட்டி யோக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  முன்னதாக மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்து,  அப்பகுதியில் உள்ள அக்னி மாரியம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டு  பூஜைகள் நடந்தது. பின்னர் கடைவீதி, ராஜவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து கோபுர கலசம் மற்றும் சாமிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் எருமப்பட்டி  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: