செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் டூவீலரில் சென்று திமுகவினர் பிரசாரம்

கிருஷ்ணகிரி, பிப்.23: கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., தலைமையில் டூவீலரில் சென்று திமுகவினர் பிரசாரம் செய்தனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் மாவட்ட திமுக சார்பில் “ஸ்டாலின் தான் வராரு, நல்லாட்சி தரப்போறாரு” என்ற பாடல் தொடக்க நிகழ்ச்சி மற்றும் திமுக ஆட்சி கால சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., தலைமை வகித்து, துவக்கி வைத்தார். அப்போது கலைக்குழுவினர் பாடலுக்கேற்ப நடனமாடினர். அதைத் தொடர்ந்து டூவீலரில் பழையபேட்டை, காந்தி சாலை, 5 ரோடு ரவுண்டானா, பெங்களூரு சாலை, லண்டன்பேட்டை வழியாக மீண்டும் அண்ணா சிலை வரை ஊர்வலமாக சென்று, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசு மூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நவாப் உள்பட 500க்கும் மேற்பட்டோர்  டூவீலர்களில் சென்று பிரசாரம் மேற்கொண்டனர்.

Related Stories: