பாலக்கோட்டில் நாளை உள்ளூர் விடுமுறை

பாலக்கோடு, பிப்.23: தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா வெளியிட்டுள்ள அறிக்கை: பாலக்கோடு வட்டம் மற்றும் நகரத்தில் புதூர் பொன்மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, நாளை (24ம் தேதி) பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு கட்டும் வகையில், வரும் மார்ச் 6ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று, பாலக்கோடு சார் நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: