அருர், பிப்.23: அரூர் வட்டத்தில் விவசாய பணிகளில் விவசாயிகளின் நிதித் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் நோக்கில், வங்கிகள் மூலம் உழவர் கடன் அட்டைகள் (கிசான் கிரெடிட் கார்டு) வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் பெற நேற்று விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நில ஆவணங்களுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கியிலும் விண்ணப்பிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.