காளையார்கோவில், பிப்.23: காளையார்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெளியூர்களில் அறுவடை செய்த வைக்கோலை விதி மீறி வாகனங்களில் கொண்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. காளையார்கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் சில மாதங்களுக்கு முன்னால் பரவலாக பெய்த மழையால் நெல் விளைச்சல் அதிகமாக உள்ளது. தற்போது அப்பகுதிகளில் அறுவடை முடிந்து வரும் நிலையில், அறுவடை செய்த வைக்கோலை பிற ஊர்களுக்கு ஏற்றி செல்கின்றனர். லாரிகள் போன்ற பெரிய வாகனங்களுக்கு வாடகைச் செலவு அதிகமாக இருப்பதினால், மினி சரக்கு லாரி, டிராக்டர் போன்ற சிறிய வாகனங்களில் இருபுறமும் அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு மதுரை-தொண்டி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்கின்றனர்.