பாஜகவின் பொய், பித்தலாட்டம் தமிழகத்தில் என்றுமே எடுபடாது போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பேச்சு

சிவகங்கை, பிப்.23:  பாஜகவின் பொய், பித்தலாட்டம் வடமாநிலத்தில் எடுபடும். தமிழகத்தில் என்றுமே எடுபடாது என என முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்எல்ஏ பேசினார். சிவகங்கை அரண்மனைவாசல் முன் திமுக சார்பில் பெட்ரோல், டீசல்,காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்எல்ஏ பேசியதாவது: ‘‘உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல், காஸ் மீதான வரி இந்தியாவில் உள்ளது. இதற்கு காரணமான மத்திய மோடி அரசும், அதற்கு துதி பாடுகிற மாநில எடப்பாடி பழனிச்சாமி அரசும் மக்கள் விரோத அரசாக உள்ளன. மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் தமிழக அரசு கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது.

அதிமுக அரசு பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளது. அதனால் எதையும் எதிர்க்காமல் உள்ளனர். காஸ் மானியத்தை வங்கியில் வரவு வைப்போம் எனக்கூறி மக்களை ஏமாற்றி தற்போது மானியம் கிடைக்காத நிலைக்கு போய் விட்டது. பாஜகவினரின் பொய் பித்தலாட்டம் வட மாநிலங்களில் எடுபடலாம். ஆனால் தமிழகத்தில் என்றுமே எடுபடாது. அதனால் தான் அதிமுக,பாஜக கூட்டணிக்கு மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் மரண அடி கொடுத்தனர். ஊழல் நிறைந்த இந்த மக்கள் விரோத அதிமுக அரசை அகற்ற வேண்டும்’’ என்று பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், திமுக மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, ஜோன்ஸ்ரூசோ, தலைமை செயற்குழு உறுப்பினர் தா.ராமையா, சிவகங்கை நகர் செயலாளர் துரைஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் அயூப்கான், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி,காளையார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கென்னடி, ஆரோக்கியசாமி, கிருஷ்ணகுமார், நாட்டரசன்கோட்டை நகர் செயலாளர் ஜெயராமன், இளைஞரணி அமைப்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: