அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் போராட்டம்

சிவகங்கை, பிப்.23:  சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றுவோம் என 110விதியின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை அமல்படுத்த வேண்டும். பஞ்சப்படியுடன் ஊழியர்களுக்கு ரூ.10லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5லட்சம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. அங்கன்வாடி பணியாளர்கள் கடும் வெயிலில் நேற்று காலை 10மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாக்கியமேரி, மாவட்ட பொருளாளர் தாமரைச்செல்வி மற்றும் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: