மீன்பாடு குறைந்ததால் கலர் வலை மீன்பிடிப்பில் ஆர்வம் காட்டும் மீனவர்கள்

ஆர்.எஸ்.மங்கலம்,பிப்23: திருப்பாலைக்குடி மீனவர்கள் மீன்பிடி வலைகளை கலர் சாயத்தில் மூழ்கடித்து கடலில் வலை விரித்து மீன்பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, காரங்காடு, தேவிபட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசித்து வரும் மீனவர்கள் நாட்டு படகு மற்றும் விசை படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளை நிறத்தில் உள்ள வலைகளை மீன் பிடிப்பதற்கு கடலில் மீனவர்கள் விரிக்கும் போது ஒரு சில வகை மீன்கள் அந்த வலைகளை அடையாளம் கண்டறிந்து வலைகளை விட்டு விலகி சென்று விடுகின்றன. இதனால் மீனவர்களுக்கு மீன்பாடு கிடைப்பதில்லை.

இதனால் பச்சை, ஊதா உள்ளிட்ட கலர் சாயங்களை காய்ச்சி அதில் வெள்ளை நிற மீன்பிடி வலைகளை நனைத்து வலைகளின் கலர்களை மாற்றி மீன்பிடிப்பிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பச்சை, ஊதா உள்ளிட்ட வலைகள் கடல் நீரின் கலரில் ஒத்துபோவதால் வலைகள் விரித்திருப்பது தெரியாமல் அதிகளவில் மீன்கள் சிக்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், வெள்ளை நிற வலைகளை விரிக்கும் போது கடல் நீரில் வலைகள் இருப்பதை ஒரு சில மீன் கூட்டங்கள் அறிந்து விலகி சென்று விடுகின்றன. இதனால் கடல் நீரின் நிறத்திற்கு ஏற்ற வகையில் வலைகளை மாற்றி மீன் பிடித்து வருகிறோம். பச்சை நிற வலைகளில் நகரை, முரல், பாரா உள்ளிட்ட மீன்கள் அதிகளவி–்ல கிடைத்து வருகின்றன என்றார்.

Related Stories: